/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் பாரிவேட்டை தெப்ப உற்சவ விழா
/
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் பாரிவேட்டை தெப்ப உற்சவ விழா
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் பாரிவேட்டை தெப்ப உற்சவ விழா
சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் பாரிவேட்டை தெப்ப உற்சவ விழா
ADDED : பிப் 01, 2024 11:27 AM
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தெப்பக்குளத்தில் நேற்று பாரிவேட்டை தெப்ப உற்சவ விழா நடந்தது.
காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 26,27,28 ஆகிய நாட்களில் தேரோட்டம் நடந்தது. இந்நிலையில் கோவில் அடிவாரத்தில் உள்ள நந்தவனத் தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக் குளத்தில் பாரிவேட்டை தெப்ப உற்சவ நிகழ்ச்சி நேற்று காலை, 11:00 மணிக்கு நடந்தது. சுவாமி பாரிவேட்டை மண்டபத்திற்கு எழுந்தருளியும், தெப்பக் குளத்தைச் சுற்றி வலம் வந்தும், தெப்பக்குளத்தில் தெப்ப
உற்சவம் நடந்தது.
அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சுப்பிரமணியர் திரும்பினார். வரும் 4ம் தேதி மாலை, 3:00 மணிக்கு சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு மலைக் கோவிலில் திருவிழா கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.