/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 1.13 கோடிக்கு ஏலம்
/
பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 1.13 கோடிக்கு ஏலம்
ADDED : அக் 20, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, அக். 20-
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில், இந்த அக்., மாதத்தின், 15 நாட்களில் மட்டும், 1.13 கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் நடந்தது.
தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும், தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இம்மாதம், 15 நாளில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 340 விவசாயிகள், 604 குவியல்களாக, 21.85 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்தனர். இவை கிலோ, 200 முதல், 676 வரை சராசரியாக, 463 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 1.13 கோடி ரூபாய்.