sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மக்கள் ஆட்டோ' டிரைவர் மீது தாக்கு; போலீசில் புகார்

/

மக்கள் ஆட்டோ' டிரைவர் மீது தாக்கு; போலீசில் புகார்

மக்கள் ஆட்டோ' டிரைவர் மீது தாக்கு; போலீசில் புகார்

மக்கள் ஆட்டோ' டிரைவர் மீது தாக்கு; போலீசில் புகார்


ADDED : ஜூலை 30, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 42; ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று உள் நோயாளியாக சேர்ந்து, டவுன் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து செந்தில்குமார் கூறியதாவது: ஈரோடு மக்கள் ஆட்டோ சார்பில் ஐந்து மாதமாக ஆட்டோ ஓட்டுகிறேன்.

இதற்கு முன் பயணிகள் ஆட்டோ, பல ஆண்டாக ஓட்டினேன். நேற்று காலை 9:30 மணியளவில் பயணி ஒருவரின் மொபைல்போன் அழைப்பை ஏற்று கனி மார்க்கெட் அருகே சென்றேன். அங்கிருந்த பயணிகள் ஆட்டோ டிரைவர்கள் சிலர், பயணிகளை ஏற்ற கூடாது என்று தகராறு செய்தனர். அப்போது ராஜா, ஆசிக் என இரு ஆட்டோ டிரைவர்கள் கைகளால் என்னை அறைந்து, முகத்தில் குத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us