sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்.ஐ., நியமிக்க மக்கள் எதிர்பார்ப்பு

/

புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்.ஐ., நியமிக்க மக்கள் எதிர்பார்ப்பு

புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்.ஐ., நியமிக்க மக்கள் எதிர்பார்ப்பு

புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்.ஐ., நியமிக்க மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜூன் 09, 2025 03:28 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பெண் எஸ்.ஐ., நியமிக்க மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள், ஒரு நகராட்சி பத்து ஊராட்சிகளில், 100க்கும் மேற்பட்ட கிராமங்-களில், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஸ்பின்னிங் மில், ஜின்னிங் பேக்டரி, விசைத்தறி, பனியன் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. பல ஸ்பின்னிங் மில்களில் பெண் தொழிலாளர் விடுதிகள் உள்-ளன. வெளி மாவட்டம் மற்றும் ஒடிசா, பீகார், ஆந்திரா உள்-ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி பணிபுரிகின்றனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், தங்கள் குடும்ப பிரச்னை, மற்றும் பாதிப்புகள் குறித்து, ஆலோசனை பெற, புகார் செய்ய, புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் புகார்களில், 50 சதவீதம் வரை குடும்ப தகராறு, இளம் வயதில் திருமணம் செய்ய முயற்சி என பெண்கள் தொடர்பான புகார்களாக உள்ளன. இங்கு பணிபுரிந்த பெண் எஸ்.ஐ.,க்கள் பணி மாறுதலாகி சென்று விட்டனர். ஒன்-றரை ஆண்டுகளாக பெண் எஸ்.ஐ., பணியிடம் காலியாக உள்-ளது. ஆண் எஸ்.ஐ., க்கள் குடும்ப தகராறு குறித்து பெண்களிடம் விசாரிக்கின்றனர்.

இதனால் புகார் தர வரும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் போலீசார் பற்றாக்குறை உள்ளதால், மனுக்களை உடனுக்-குடன் விசாரிக்க முடியாமல் திணறுகின்றனர். புன்செய்புளியம்-பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு பெண் எஸ்.ஐ., நியமிக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us