sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றணும் கொடுமுடியில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்

/

கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றணும் கொடுமுடியில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்

கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றணும் கொடுமுடியில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்

கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றணும் கொடுமுடியில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்


ADDED : டிச 01, 2024 01:20 AM

Google News

ADDED : டிச 01, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்றணும்

கொடுமுடியில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்

கொடுமுடி, டிச. 1-

கொடுமுடியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றுமாறு, மக்கள் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த ஜன., 2ம் தேதி உத்தரவிட்டது. அதாவது, ௯௦ நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர், நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்

சாலைத்துறை மற்றும் பேரரூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த உத்தரவை அனைத்து துறை அதிகாரிகளும் காற்றில் பறக்க விட்டு விட்டனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு, நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் விடுத்த நிலையில், நேற்று முன்தினம் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.

இதை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி, கொடுமுடியில் பழைய ஈரோடு-கரூர் சாலையில் உள்ள வீடுகள், கடைகளில் மக்கள் நேற்று கறுப்புக்கொடி கட்டி வைத்தனர். கொடுமுடி போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என உறுதி கூறியதால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூறி, கறுப்புக்கொடிகளை மக்கள் அகற்றி கொண்டனர்.






      Dinamalar
      Follow us