sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போலீஸ்காரரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

/

போலீஸ்காரரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

போலீஸ்காரரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

போலீஸ்காரரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு


ADDED : அக் 17, 2024 01:17 AM

Google News

ADDED : அக் 17, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போலீஸ்காரரின் தற்கொலைக்கு

காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு

ஈரோடு, அக். 17-

மகன் தற்கொலைக்கு காரணமானவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஈரோடு எஸ்.பி.யிடம், அவரது தந்தை மனு அளித்தார்.

அம்மாபேட்டை அரிஜன காலனியை சேர்ந்த பெருமாள், 63. தன் மருமகள் மற்றும் உறவினர்களுடன் நேற்று ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி ஜவகரிடம் அளித்த மனு: என் மகன் செல்லக்குமார், 36; அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாம் நிலை காவலராக(போலீஸ்) பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். செல்லக்குமார் கடந்த, 2ல் சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் பணியில் இருக்கும்போது, சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்து, வழக்கு போட்டு அபராதம் விதிக்க முயன்றார். அதற்குள் வாகனத்தின் ஓட்டுநர் பிரபுதேவா, வாகன உரிமையாளர் கார்த்திக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் வேலுமணி, அழைத்ததின்பேரில், அந்த வாகனத்தை செல்லக்குமார் விடுவித்ததாக கூறப்படுகிறது. சரக்கு வாகன உரிமையாளர் கார்த்தி, அவரது நண்பர்கள் வேலுச்சாமி, விஜயகுமார், வெங்கடேஷ்வரன் காரில் வந்து, என் மகன் செல்லக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களது வாகனத்தை எப்படி நிறுத்தலாம் என கேட்டு கொலை மிரட்டல் விடுத்து, எனது மகனை தாக்கியுள்ளனர்.

இச்சம்பவங்களை அந்த நபர்கள் வீடியோ எடுத்து அவர்களுக்கு சாதகமான பகுதியை மட்டும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இதனால்

செல்லக்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மன

வேதனை அடைந்த எனது மகன் கடந்த, 7 ல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்ளும்போது, அவர் பாக்கெட்டில் எழுதி வைத்த பேப்பரை யாரோ ஒரு போலீஸ்காரர் எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது. எனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தோம். மனு மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. என் மகன் இறப்பிற்கு காரணமான நால்வரையும் கைது செய்யவில்லை. காலம் தாழ்த்தாமல் என் மகன் இறப்புக்கு காரணமானவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சின்னப்பள்ளம் சோதனை சாவடியில் சம்பவத்தன்று நடந்த வீடியோ பதிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us