/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
8 மணி நேர வேலையை உறுதி செய்யக்கோரி மனு
/
8 மணி நேர வேலையை உறுதி செய்யக்கோரி மனு
ADDED : டிச 24, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 24-
தமிழக மக்கள் நலக்கட்சி நிர்வாகிகள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. சில தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், 8 மணி நேரத்துக்கும் கூடுதலாக, 12 மணி நேரம் வேலை செய்கின்றனர்.
ஆனால், குறைவான ஊதியத்தையே பெறுகின்றனர். தொழிலாளர்களின் உடல் நலம், பொருளாதாரத்தை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து, 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.