/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்
/
சென்னிமலையில் நாளை பி.எப்., குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 27, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், இ.எஸ்.ஐ.சி., சார்பில், சென்னிமலை அர்த்தநாரிபாளையத்தில் உள்ள 'சென்னிமலை இண்ட் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனத்தில்' மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
சந்தாதாரர்கள் காலை, 9:30 முதல் மதியம், 1:00 மணி வரையும், தொழில் அதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் மதியம், 2:00 முதல் மாலை, 5:30 மணி வரை கலந்து கொண்டு வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் காப்பீடு தொடர்பான குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.