ADDED : செப் 28, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;அந்தியூர் தாலுகா பூனாச்சி கிராமத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ., சார்பில், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் நாளை நடக்கிறது.
மாவட்ட அமலாக்க அதிகாரி சரவணகுமார் தலைமை வகிக்கிறார். காலை, 9:30 - மதியம், 1:00 மணி வரை சந்தாதாரர்களுக்கும், மதியம், 2:00 - மாலை, 5:30 மணி வரை தொழிலதிபர்கள், விலக்களிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.