/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
/
பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
பிடாரியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : அக் 24, 2024 01:25 AM
பிடாரியூர் மாரியம்மன் கோவில்
பொங்கல் விழா கோலாகலம்
சென்னிமலை, அக். 24-
பிடாரியூர், மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது.
சென்னிமலை அடுத்துள்ள, முகாசிபிடாரியூரில் பிடாரியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தாண்டு பொங்கல் விழா கடந்த, 8ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. கம்பத்திற்கு தினமும் பெண்கள் பயபக்தியுடன் மஞ்சள் நீர் ஊற்றியும், வேப்பிலை அலங்காரம் செய்தும், மஞ்சள் பூசியும் வழிபாடு நடத்தினர். சிலர் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. நேற்று காலை பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலி கொடுத்தும் மாரியம்மனை வழிபாடு செய்தனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாளை மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.
அதே, போல் பெரியார் நகர் மாரியம்மன் கோவிலிலும் பொங்கல் விழா நேற்று நடந்தது இதில், அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலி கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.