/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
3 மாதங்களில் 1.25 லட்சம் மரக்கன்று நடவு
/
3 மாதங்களில் 1.25 லட்சம் மரக்கன்று நடவு
ADDED : டிச 27, 2025 07:56 AM
ஈரோடு: தமிழகத்தில் பசுமை பரப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிக-ரிக்கும் நோக்கத்துடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மூன்று லட்சத்து, 17,500 மரக்கன்று நடவு இலக்கு நிர்ணயித்து, 25 இடங்களில் மரக்கன்று உற்பத்தி செய்யப்பட்டது. இவை புறம்போக்கு நிலங்கள், குளக்கரை, சாலை ஓரங்களில் நடப்பட்-டது.
கடந்த ஆக., மாதம் வரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், 2.65 லட்சம் மரக்கன்றுகள், வனத்துறையுடன் இணைந்து, 52,500 மரக்கன்றுகள் என, 3.17 லட்சம் மரக்கன்-றுகள் நடப்பட்டது. அடுத்த மூன்று மாதங்களில், 1.25 லட்சம் மரக்கன்று நடவு செய்து முடிக்கப்பட்டுள்ளன.
நுாறு நாள் வேலை திட்டப்பணியாளர், மக்கள், கல்வி நிறுவனத்-தினர் மூலமும் நடவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பசுமை தமிழ்நாடு இயக்க ஒருங்கிணைப்பு
அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

