/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மண் கடத்தல் புகாரில் சிக்கிய 'பொக்லைன்'
/
மண் கடத்தல் புகாரில் சிக்கிய 'பொக்லைன்'
ADDED : நவ 25, 2024 02:25 AM
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே தண்ணீர்பந்தல் பகுதியில், சட்டவி-ரோதமாக மண் அள்ளுவதாக புன்செய் புளியம்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, வி.ஏ.ஓ., ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த சரவணன், கந்தவேல், சண்முகம், பழனிச்சாமி ஆகி-யோருக்கு சொந்தமான கூட்டுபட்டா பூமியில் பொக்லைன் இயந்-திரம் நிறுத்தப்பட்டிருந்தது.வருவாய் துறையினர் விசாரணையில் உரிய அனுமதி இல்லாமல் இயந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளியது தெரியவந்தது. பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, புன்செய் புளியம்-பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசில் புகாரும் அளித்தனர்.