ADDED : ஏப் 21, 2025 07:30 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை: சென்னிமலை, பெருந்துறை வட்டார பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு, சாலை வரி உயர்வை கண்டித்து கடந்த, 16ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆறாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.
தங்களுக்கு சாதகமான முடிவை அரசு அறிவிக்கும் வரை, வேலை நிறுத்தம் தொடரும் என்று பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். போராட்டத்தால் பெருந்துறை சிப்காட் அருகே, 60க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
