sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஏவல் துறையாக செயல்படும் காவல்துறை; தினகரன் பேச்சு

/

ஏவல் துறையாக செயல்படும் காவல்துறை; தினகரன் பேச்சு

ஏவல் துறையாக செயல்படும் காவல்துறை; தினகரன் பேச்சு

ஏவல் துறையாக செயல்படும் காவல்துறை; தினகரன் பேச்சு


ADDED : ஜூலை 06, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி, ஈரோடு மாவட்டம் பவானி அருகே காடையாம்பட்டியில், அ.ம.மு.க., ஒருங்கிணைந்த ஈரோடு புறநகர் மாவட்ட செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சி பொது செயலாளர் தினகரன் கலந்து கொண்டார்.

முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று சொல்கிறார். காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. மக்களின் நண்பர்களாக பாதுகாவலராக இருக்க வேண்டிய காவல்துறை, யாரோ ஒருவர் கொடுத்த புகாருக்கு, தமிழகமே வருத்தப்படும் அளவுக்கு, அஜித்குமார் என்ற இளைஞரை அடித்தே

கொன்றுள்ளனர். காவல்துறை மீது நம்பிக்கை இனி வராது எனும் அளவுக்கு தமிழகம்

தள்ளப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்காக நடக்கும் தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர் மற்றும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராடுகின்றனர். கூட்டணி வைத்து மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விடலாம் என்று நினைப்பில் உள்ளனர். 58 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்களில், 28,000 காலி பணியிடம் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மூடப்பட்டுள்ளது. ஏழை மக்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட திட்டம், தற்போது கேள்விக்குறியாகி விட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி, 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us