sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

போதை பொருள் விற்பனையில் தொடர்பு? நைஜீரியா வாலிபரிடம் போலீசார் 'கிடுக்கி'

/

போதை பொருள் விற்பனையில் தொடர்பு? நைஜீரியா வாலிபரிடம் போலீசார் 'கிடுக்கி'

போதை பொருள் விற்பனையில் தொடர்பு? நைஜீரியா வாலிபரிடம் போலீசார் 'கிடுக்கி'

போதை பொருள் விற்பனையில் தொடர்பு? நைஜீரியா வாலிபரிடம் போலீசார் 'கிடுக்கி'


ADDED : டிச 20, 2024 07:08 AM

Google News

ADDED : டிச 20, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில், நைஜீரியா வாலிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் மொபைல் எண்ணை, சென்னை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தனர்.

இதில் பெருந்துறை ஈ.பி.நகரில் வசிக்கும் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஜான் சிபுக்கின், 25, என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவர்கள் அறிவுறுத்தலின்படி, பெருந்துறை போலீசார், நேற்று காலை அவரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

ஜான் சிபுக், 2022ல் ஓராண்டு விசா பெற்று இந்தியா வந்தார். திருப்பூர் காதர் பேட்டை பகுதி பஜாரில் பனியன் துணிகளை வாங்கி நைஜீரியாவுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளார். பெருந்துறையில் வீடு எடுத்து இரண்டாண்டாக தங்கியுள்ளார். வரும், 2025 பிப்., வரை விசா கால வரம்பை நீடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். போதை பொருள் விற்பனையாளர்களுடனான தொடர்பு குறித்தும் விசாரித்தோம். இதில் சந்தேகத்துக்கு இடமாக எதுவும் இல்லாததால் அவரை விடுவித்து விட்டோம். இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us