sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிவகிரி தம்பதி கொலையாளிகளுக்கு போலீஸ் கஸ்டடி விசாரணை நீட்டிப்பு

/

சிவகிரி தம்பதி கொலையாளிகளுக்கு போலீஸ் கஸ்டடி விசாரணை நீட்டிப்பு

சிவகிரி தம்பதி கொலையாளிகளுக்கு போலீஸ் கஸ்டடி விசாரணை நீட்டிப்பு

சிவகிரி தம்பதி கொலையாளிகளுக்கு போலீஸ் கஸ்டடி விசாரணை நீட்டிப்பு


ADDED : ஜூன் 17, 2025 02:31 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் நான்கு பேரிடமும், மேலும் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடி விசாரணை நடத்த, கொடுமுடி மாஜிஸ்திரேட் அனுமதித்தார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி, விளக்கேத்தி, உச்சிமேடு, மேகரையான் தோட்டத்தில் தனியாக ராமசாமி-பாக்கியம் தம்பதி, படுகொலை செய்யப்பட்டு, பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

இது தொடர்பாக அறச்சலுாரை சேர்ந்த ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோரை, சிவகிரி போலீசார் கைது செய்தனர். மேலும், திருட்டு நகைகளை வாங்கி உருக்கிய நகை கடைக்காரரான ஞானசேகரனும் கைது செய்யப்பட்டார். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்ததால், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட சிறையில் ஞானசேகரன் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக கைதான மூவரும், சென்னிமலையில் நடந்த இரட்டை ஆதாய கொலையில் மூவரை கொலை செய்து நகை திருடியதாக தந்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் கொலையில் ஏற்கனவே கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட, 11 பேர் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தம்பதி கொலை வழக்கில் நான்கு பேரையும், கடந்த, 13ல் கஸ்டடி விசாரணைக்கு, போலீசார் எடுத்தனர். ஈரோடு ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் விசாரணை நடந்தது. இரு தினங்களாக மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் விசாரித்தார். கோவை டி.ஐ.ஜி., சசிமோகன் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது ஈரோடு எஸ்.பி., சுஜாதா, விசாரணை அதிகாரியான ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் உடனிருந்தனர். நேற்று கஸ்டடி விசாரணை முடிந்த நிலையில், மீண்டும் கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் பாண்டியராஜன் முன், நான்கு பேரும்

ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது போலீஸ் தரப்பில், நால்வரிடமும் மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால், கஸ்டடி விசாரணை காலத்தை நீட்டிக்க மனு அளித்தனர். இதை பரிசீலித்த நடுவர், மேலும் மூன்று நாட்கள் அனுமதி அளித்தார். வரும், 19ம் தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிவகிரி ஆதாய கொலை வழக்கு மட்டுமின்றி, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த, ஆதாய கொலை வழக்குகள் குறித்தும், இம்மூன்று நாட்களில் விசாரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us