/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஏலச்சீட்டு மோசடி நபர் சரண் கஸ்டடி எடுக்க போலீசார் முடிவு
/
ஏலச்சீட்டு மோசடி நபர் சரண் கஸ்டடி எடுக்க போலீசார் முடிவு
ஏலச்சீட்டு மோசடி நபர் சரண் கஸ்டடி எடுக்க போலீசார் முடிவு
ஏலச்சீட்டு மோசடி நபர் சரண் கஸ்டடி எடுக்க போலீசார் முடிவு
ADDED : மே 15, 2025 03:21 AM
ஈரோடு:ஈரோட்டில், ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து, நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை, போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு, கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் அழகர்சாமி, 46. பைனான்ஸ் தொழிலும், ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். தொழிலில் பங்குதாரராக அழகர்சாமியின் மகளான மாரியம்மாள், 26, இருந்து வந்தார். அழகர்சாமியிடம் கடந்த, 2019ல் பெரியசேமூரை சேர்ந்த பாலு, குமார் ஆகியோர், 5.25 லட்சம் ரூபாய் செலுத்தி ஏலச்சீட்டில் சேர்ந்துள்ளனர். ஏலச்சீட்டு நிறைவடைந்தும் தொகையை அழகர்சாமி வழங்கவில்லை.
இதற்கிடையே, பாலு மட்டும் தனியாக அழகர்சாமியிடம், 5.25 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டில் சேர்ந்தார். முதல் ஏலச் சீட்டுக்கான பணத்தை கேட்டபோது, அழகர்சாமியும், அவரது மகளும் சேர்ந்து, இருவருக்கும் தலா 2.25 லட்சம் ரூபாய்க்கான இரு காசோலைகளை வழங்கினர்.
குமாருக்கு வழங்கப்பட்ட காசோலையில் பணம் வசூலானது. பாலுவுக்கு வழங்கப்பட்ட காசோலையில் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, பாலு, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் அழகர்சாமி, மாரியம்மாள் இருவரும் அங்கீகாரம் இல்லாத ஏலச்சீட்டு நடத்தி பாலுவிடம், 7 லட்சத்து, 49 ஆயிரத்து 500ஐ மோசடி செய்ததும், 40க்கும் மேற்பட்டவர்களிடம், ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததும் தெரியவந்தது.
தந்தை, மகள் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். மாரியம்மாளை கடந்த பிப்.,10ல், கைது செய்தனர். தலைமறைவாக இருந்த அழகர்சாமி, நீதிமன்றத்தில் சரணடைந்தார். அழகர்சாமியை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள போலீசார், நீதிமன்றம் மூலம் அதற்கான நடவடிக்கையை எடுக்க உள்ளனர்.