/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இறந்து கிடந்த வாலிபர் போலீசார் விசாரணை
/
இறந்து கிடந்த வாலிபர் போலீசார் விசாரணை
ADDED : செப் 15, 2024 02:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு-சென்னிமலை சாலை, தொழிலாளர் நலவாரிய அலுவலக நுழைவு வாயில் அருகே, வாலிபர் ஒருவர் மயங்கி கிடப்பதாக நேற்று முன்தினம் தகவல் வந்தது. ஈரோடு தாலுகா போலீசார் வாலிபரை பரிசோதித்தபோது, இறந்தது தெரியவந்தது.
யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. நீல நிற சட்டை, சாம்பல் நிற டிரவுசர் அணிந்திருந்தார். வலது பக்க மார்பின் மேல் ஒரு மச்சம் இருந்தது. ஈரோடு அரசு மருத்தவமனைக்க உடலை அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.