sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வ.உ.சி., பூங்காவுக்கு குண்டு மிரட்டல் திருச்சி ஆசாமியை தேடும் போலீசார்

/

வ.உ.சி., பூங்காவுக்கு குண்டு மிரட்டல் திருச்சி ஆசாமியை தேடும் போலீசார்

வ.உ.சி., பூங்காவுக்கு குண்டு மிரட்டல் திருச்சி ஆசாமியை தேடும் போலீசார்

வ.உ.சி., பூங்காவுக்கு குண்டு மிரட்டல் திருச்சி ஆசாமியை தேடும் போலீசார்


ADDED : மார் 21, 2025 02:54 AM

Google News

ADDED : மார் 21, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு வ.உ.சி., பூங்காவுக்கு குண்டு மிரட்டல் விடுத்த திருச்சி ஆசாமியை, ஈரோடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மதியம், ஒரு மொபைல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், வ.உ.சி., பூங்கா பின்புறம், 25வது கேட் நெம்பரில் வெடிகுண்டு உள்ளது. சில மணி துளிகளில் வெடிக்க உள்ளது எனக்கூறி அழைப்பு துண்டித்துள்ளார்.

கருங்கல்பாளையம் போலீசார், வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. அதேசமயம் புரளியை ஏற்படுத்திய ஆசாமியின் மொபைல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. நேற்று காலை ஆசாமி போனை ஆன் செய்துள்ளார். சேலம், சன்னியாசிபட்டியில் இருப்பதை அறிந்த போலீசார், ஆசாமி யார் என்பதையும் கண்டறிந்து அங்கு விரைந்தனர்.

இதுபற்றி போலீசார் கூறியதாவது:

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், திருச்சியை சேர்ந்த தியாகராஜன், 35; ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஒரு சோப்பு கம்பெனியில் இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அப்போது, 40 வயது மதிக்கதக்க திருமணமாகி குடும்பத்துடன் வசித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை பிரிந்து விட்டார். இந்நிலையில் தான் குண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

அப்பெண்ணிடமும், சோப்பு கம்பெனியிலும் விசாரித்தும், தியாகராஜன் குறித்து தகவல் இல்லை. அவரை பிடித்தால் மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் உண்மையா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்கு திசை திருப்ப இவ்வாறு செய்தாரா. என தெரியவரும். இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us