/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குரு பூஜை விழாவுக்கு தடை பொல்லான் பேரவை மனு
/
குரு பூஜை விழாவுக்கு தடை பொல்லான் பேரவை மனு
ADDED : டிச 26, 2025 05:05 AM
ஈரோடு: மாவீரன் பொல்லான் பேரவை நிறுவன தலைவர் வடிவேல், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையுடன் இணைந்து செயல்பட்டவர்கள் பொல்லான் மற்றும் சுபேதர் வேலப்பக-வுண்டர் என்பது வரலாறு. பொல்லான் பிறந்த நாளை அரசு விழா-வாக வரும், 28ல் அனுசரிக்கப்படுகிறது. பொல்லானுக்கு மணி-மண்டபம் அமைக்கக்கூடாது எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்-றத்தில் வழக்கு தொடுத்த, தீர்த்தகிரி மக்கள் இயக்கத்தினர், சுபேதர் வேலப்பகவுண்டனருக்கு 28ம் தேதி காலை, 9:00 மணிக்கு, நல்லமங்காபாளையத்தில் குரு பூஜை விழா நடத்த அழைப்பிதழ் வெளியிட்டுள்ளனர். இதனால் பொல்லான் நிகழ்ச்சிக்கு வருவோர், அந்நிகழ்வுக்கு வரு-வோரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த குரு பூஜையை வேறு தேதியில் நடத்த அறிவுறுத்த வேண்டும். அல்-லது நிகழ்வுக்கு தடை விதிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மனு தரப்பட்டது. இவ்வாறு கூறினார்.

