/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி, அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா ஜோர்
/
பள்ளி, அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா ஜோர்
ADDED : ஜன 14, 2025 02:47 AM
கோபி: பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோபி சப்-டிவிஷன் மற்றும் கோபி போலீஸ் ஸ்டேஷன் சார்பில், சமத்துவ பொங்கல் விழா மொடச்சூரில் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., சீனிவாசன் தலை-மையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
கோபி இன்ஸ்-பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார், மக்கள் பங்கேற்றனர். இதேபோல் சுற்றுலாத்துறை சார்பில், கொடிவேரி தடுப்ப-ணையில், சுற்றுலாத்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் பொங்கல் வைத்து கொண்டாடினர். * பவானி நகராட்சி அலுவலகத்தில் தலைவர் சிந்துாரி தலை-மையில் பொங்கல் விழா நடந்தது. கமிஷனர் மோகன்குமார், கவுன்சிலர்கள் மற்றும் மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சர்க்-கரை பொங்கல், கரும்பு
வழங்கப்பட்டது.* ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில், வண்ண கோலங்களிட்டு, பொங்கல் வைத்தனர். பள்ளியை சேர்ந்த அனைத்து மாணவிகள்,ஆசிரியைகள் பங்கேற்றனர்.* பெருந்துறை அடுத்த சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா -நேற்று கொண்டாடப்பட்-டது. தலைமை ஆசிரியர் காளியப்பன் தலைமை வகித்தார். சமத்-துவ பொங்கல் வைக்கப்பட்டு
மாணவர்களுக்கு பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. வீரணம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவ, மாணவியர் மற்றம் ஆசிரியர்கள், பாரம்பரிய உடை அணிந்து, சர்க்கரை பொங்கல் வைத்து கொண்டாடினர்.* சென்னிமலை ஒன்றிய தி.மு.க., சுற்றுசூழல் அணி சார்பாக, பேரூராட்சி இரண்டாவது வார்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கவுன்சிலர் கலைச்செல்வி கண்ணன் தலைமை வகித்தார். சுற்றுசூழல் அணி
நிர்வாகிகள் தங்கராஜ், யுவராஜ், முன்னிலை வகித்தனர். மாநில சுற்றுச்சூழல் அணி செய-லாளர் கார்த்திகேய சிவசேனாபதி பங்கேற்றார். ஏழை மக்களுக்கு இலவச சேலை வழங்கி பேசினார்.

