ADDED : டிச 06, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை அருகே எக்கட்டாம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 19 ம் தேதி பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. 27 ம் தேதி இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. பொங்கல் விழா நேற்று நடந்தது.
நொய்யல், அண்ணாமலைபாளையம், புதுவலசு, சாணார்பாளையம், தாமரைக்காட்டுவலசு மற்றும் கோவிலை சேர்ந்த ஏழு கிராமத்து மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டனர். இரவு கம்பம் பிடுங்கி நொய்யல் ஆற்றில் விடப்பட்டது. இதேபோல் சென்னிமலை அருகே கே.ஜி.,வலசு அடுத்துள்ள புதுவலசிலுள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் மாரியம்மனை வழிபட்டனர்.