ADDED : ஏப் 17, 2024 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:சென்னிமலை
பேரூராட்சி காட்டூரில் பழமையான செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது.
கோவிலில் பொங்கல் விழா நடந்தது. முன்னதாக பக்தர்கள் காங்கேயம் அருகே
மடவிளாகம் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் செல்வ விநாயகர்,
செல்லாண்டியம்மனுக்கு பொங்கல் வைத்தனர். தொடர்ந்து சுவாமிகளுக்கு
அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து
கொண்டனர்.

