sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானிசாகர் வனப்பகுதியில் கோடைக்கு முன்பே வறட்சி; உணவுக்காக வெளியேறும் விலங்குகள்

/

பவானிசாகர் வனப்பகுதியில் கோடைக்கு முன்பே வறட்சி; உணவுக்காக வெளியேறும் விலங்குகள்

பவானிசாகர் வனப்பகுதியில் கோடைக்கு முன்பே வறட்சி; உணவுக்காக வெளியேறும் விலங்குகள்

பவானிசாகர் வனப்பகுதியில் கோடைக்கு முன்பே வறட்சி; உணவுக்காக வெளியேறும் விலங்குகள்


ADDED : பிப் 15, 2024 12:43 PM

Google News

ADDED : பிப் 15, 2024 12:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி: கோடைக்கு முன்பே பவானிசாகர் வனப்பகுதியில் துவங்கிய வறட்சியால், மரம், செடிகள் கருகி வருவதால், வன உயிரினங்களுக்கான உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள், வனத்தை விட்டு தண்ணீர் தேடி வெளியேற துவங்கியுள்ளன.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வனப்பகுதியில் மலை குன்றுகளில் புல்வெளிகளும், அவைகளுக்கு இடையே தாழ்வான பகுதியில், மரங்களும் நீர் நிலைகளுடன் கூடிய பசுமை மாறா வனப்பகுதிகளும் உள்ளன. இந்த பசுமை வனத்தில், நீர் ஆதாரங்கள் நிறைய உள்ளன. இப்பகுதியில், வன உயிரினங்களுக்கு தடையின்றி உணவு, குடிநீர் கிடைத்து வருகிறது. வன விலங்குகள், குறிப்பாக யானைகள் வெப்பம் அதிகம் உள்ள பகல் நேரத்தில் தாழ்வான வனப்பகுதியிலும், மற்ற நேரங்களில் புல்வெளிகளிலும் உலா வருகின்றன. கோடையில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், உணவு, குடிநீர் தேடி யானைகள் உட்பட பல விலங்குகள் படையெடுக்கின்றன.

கோடை துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியிலுள்ள மரங்கள் பசுமையை இழந்து கருகி வருகின்றன. கோடைக்கு முன்பே நீர்நிலைகள் வறண்டு வறட்சி துவங்கியுள்ளது. மரங்கள், செடிகள் கருகியதால் வன விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வனத்தை சார்ந்து வாழும் யானைகள், போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல், வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை நாசம் செய்வது அதிகரித்துள்ளது. இதை தடுக்க வனத்துறையினர், வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலங்களிலும், குடியிருப்பை சுற்றியும் அகழி வெட்டியும் தீர்வு கிடைக்கவில்லை. வனப்பகுதியில் உள்ள குட்டை உள்ளிட்ட நீர் நிலைகள் வற்றி விட்டதால் அதில் நீர் நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது.

பவானிசாகர் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பவானிசாகர் வனப்பகுதியை பொறுத்தவரை பல இடங்களிலும் அகழி வெட்டியும் கூட யானைகள் ஊருக்குள் வருகின்றன. வனவிலங்குகளுக்கான உணவு, குடிநீர் தேவையை வனத்திலேயே பூர்த்தி செய்ய வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் செயற்கையாக நீர் நிரப்ப வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செயல்படுத்தினால் மட்டுமே யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க முடியும்' என்றனர்.






      Dinamalar
      Follow us