/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி பலியான சினை பசு
/
இரு சுவர்களுக்கு நடுவே சிக்கி பலியான சினை பசு
ADDED : மார் 29, 2025 07:30 AM
கோபி: கோபி அருகே கஸ்பா தொட்டிபாளையத்தை சேர்ந்த விவசாயி சந்திரக்குமார், 46; மூன்று சிந்து மாடுகள் வைத்து ஜீவனம் செய்-கிறார். மூன்று மாடுகளும் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது. ஐந்து வயதான சினை மாடு நேற்று காலை வழி தவறியது.
அண்ணா நகர் என்ற இடத்தில், குடியிருப்புகள் நிறைந்த பகு-திக்குள் நுழைந்தபோது, இரு வீடுகளுக்கும் இடையேயான குறு-கிய சந்தில், சினை மாடு சிக்கி கொண்டது. நீண்ட நேரம் சத்த-மிட்டபடி தானாக வெளியேற முயன்றும் முடியவில்லை. தகவல-றிந்த கோபி தீயணைப்பு துறையினர், பொக்லைன் ஏற்பாடு செய்து, கயிறு கட்டி மீட்டனர். ஆனால் ஏற்கனவே மூச்சுத்திணறி இறந்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.