/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
/
கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் முன்னேற்பாடு பணிகள் மும்முரம்
ADDED : ஜூன் 05, 2025 01:27 AM
ஈரோடு, ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் நாளை (6ல்) நடப்பதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
ஈரோடு கோட்டையில், ஆரு த்ர கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. நடப்பாண்டு தேர்த்திருவிழா கடந்த 30ல், கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இன்று (5) சந்திரசேகரர் அபிஷேக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு சோமாஸ்கந்தர் கஜ வாகனத்தில் ரத வீதி ஊர்வலம் நடைபெற உள்ளது.
வைகாசி விசாக தேரோட்டம் நாளை காலை, 8:15 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக வருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் சுகுமார், கோவில் செயல் அலுவலர் ஜெயலதா, அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
தேரோட்டத்துக்கு இடையூறாக, ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலை பெரியமாரியம்மன் கோவில் அருகே, சாலையின் நடுவே உள்ள பெரிய அளவிலான வழிகாட்டி பலகை மாவட்ட போலீஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பலகை தேரோட்டத்துக்கு இடையூறாக உள்ளதால், அந்த வழிகாட்டி பலகை தற்காலிகமாக அகற்றப்பட்டுள்ளது. வழிகாட்டி பலகை மாநகராட்சி அலுவலகம் முன்புறம் வைக்கப்பட்டுள்ளது. தேர் செல்லும் வழிகளில் போக்குவரத்துக்கு தடை விதித்து, பாதுகாப்பு அளிக்ககோரி போலீசாரிடம் அறநிலைத்துறை அதிகாரிகள் மனு அளித்துள்ளனர்.