/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சி ஊழியர்களுக்கு தகனம் செய்ய சலுகை
/
நகராட்சி ஊழியர்களுக்கு தகனம் செய்ய சலுகை
ADDED : பிப் 17, 2024 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி : பவானி மார்க்கெட் அருகில், நகராட்சிக்கு சொந்தமான எரிவாயு தகன மேடை இயங்கி வருகிறது.
இங்கு இறந்த நபருக்கு தகனம் செய்ய நகராட்சி நிர்வாகம். 4,500 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது.நகராட்சியில் பணிபுரியும் அலுவலர், பணியாளர், துப்புரவு தொழிலாளர்களுக்கு உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், எரிவாயு மயானத்தில் இலவசமாக தகனம் செய்து கொள்ளலாம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.