/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.50 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
/
ரூ.4.50 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ADDED : ஆக 28, 2024 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பல்வேறு வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது.
ஏலத்துக்கு, 1,403 தேங்காய் வரத்தாகி, ஒரு காய் எட்டு ரூபாய் முதல், ௧௬ ரூபாய்; 37 மூட்டை நெல் வரத்தாகி கிலோ, 20-32 ரூபாய்; 57 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 90-106 ரூபாய்; 86 மூட்டை நிலக்கடலை வரத்தாகி, கிலோ, 68-71 ரூபாய்; மூன்று மூட்டை எள் வரத்தாகி கிலோ, 53-63 ரூபாய்; இரண்டு மூட்டை பச்சைபயிறு வரத்தாகி கிலோ, 70 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 4.50 லட்சம் ரூபாய்க்கு, அனைத்தும் விலை போனது.

