/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க உற்பத்-தியாளர் தீர்மானம்
/
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க உற்பத்-தியாளர் தீர்மானம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க உற்பத்-தியாளர் தீர்மானம்
ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க உற்பத்-தியாளர் தீர்மானம்
ADDED : அக் 26, 2024 08:12 AM
காங்கேயம்: காங்கேயத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்க பொதுக்குழு கூட்டம், காங்-கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்க கட்டடத்தில் நடந்தது. தலைவர் தனபால் தலைமை வகித்தார். செயலாளர் கங்கா சக்-திவேல், பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்-திரன் முன்னிலை வகித்தனர். ரேஷன் கடை-களில் தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்தால், தென்னை விவசாயிகளின் வாழ்வா-தாரம் மேம்படும். மக்களின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
அண்டை மாநிலங்களை போல் தமிழகத்திலும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினால், மலிவு விலை பாமாயில் போன்ற எண்ணெய்-களை இறக்குமதி செய்ய தேவையில்லை. நெப்ட் நிறுவனம் மூலம் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் தேங்காய்களை, அரசே நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை-வேற்றினர். தற்போதைய தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் மீண்டும் பொறுப்பாளர்க-ளாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பர். கூட்-டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.