sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு 60,000 லட்டு ஈரோட்டில் தயாரிப்பு

/

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு 60,000 லட்டு ஈரோட்டில் தயாரிப்பு

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு 60,000 லட்டு ஈரோட்டில் தயாரிப்பு

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்கு 60,000 லட்டு ஈரோட்டில் தயாரிப்பு


ADDED : ஜன 09, 2024 11:42 AM

Google News

ADDED : ஜன 09, 2024 11:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவுக்காக, 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு, வ.உ.சி., பூங்கா வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், மகாவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நாளை மறுதினம், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பர்.

பக்தர்களுக்கு வழங்குவதற்காக, ஆஞ்சநேயர் வார வழிபாட்டு குழு சார்பில், ௬௦ ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுகுறித்து வார வழிபாட்டு குழுத்தலைவர் குமார் கூறியதாவது: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, எங்கள் வார வழிபாட்டுக்குழு, 36 ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆண்டு பக்தர்களுக்கு வழங்கும் வகையில், 60 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், 40க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

லட்டு தயாரிக்க, 2,000 கிலோ சர்க்கரை, 1,000 கிலோ கடலை மாவு, 40 கிலோ முந்திரி, 100 கிலோ திராட்சை, 50 டின் ஆயில் பயன்படுத்தப்படவுள்ளது. இதில்லாமல் நுாற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களால் செந்துாரம், மஞ்சள் கயிறு, துளசி போன்றவற்றை பேக்கிங் செய்யும் பணியும் நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us