/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணம் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு காப்பு
/
பணம் கேட்டு மிரட்டிய வாலிபருக்கு காப்பு
ADDED : ஆக 04, 2025 08:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ்.நகர், மரப்பாலம் சாலையை சேர்ந்தவர் பிரகாஷ், 24, தொழிலாளி. கருங்கல்பாளையம், செங்குட்டுவன் வீதி பாபு (எ) கருப்புசாமி, 26, பணம் கேட்டுள்ளார்.
பணம் தர மறுத்ததால் பிரகாஷை கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். அவர் புகாரின்படி கருங்கல்பாளையம் போலீசார் பாபுவை கைது செய்தனர். பாபு மீது ஏற்கனவே கருங்கல்பாளையம் போலீசில் அடிதடி, வழப்பறி வழக்குகள் உள்ளன. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் தெரிவித்தனர்.