/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'
/
பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு 'காப்பு'
ADDED : மார் 11, 2026 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டை அடுத்த நாதகவுண்டம்பாளையம் செக்குமேடு புதுக்-காலனியை சேர்ந்தவர் ஜீவானந்தம், 30; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் தனியாக வசித்து வரும் குப்பாயி, 55, என்பவர் வீட்டில் அத்து-மீறி நுழைந்து, பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். குப்பாயி கூச்சலிடவே ஜீவானந்தம் ஓட்டம் பிடித்தார்.
ஈரோடு தாலுகா போலீசில் அவர் அளித்த புகாரின்படி, வன்கொ-டுமை சட்டத்தில் வழக்குப்பதிந்து, ஜீவானந்தத்தை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆண்டு இதேபோல் மூதாட்டி வீட்டில் புகுந்து, பாலியல் தொல்லை கொடுக்க முயன்று ஜீவானந்தம் கைதாகியுள்ளார் என்றும், போலீசார் தெரிவித்தனர்.

