sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிராம உதவியாளர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; 2வது நாளாக போராட்டம்

/

கிராம உதவியாளர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; 2வது நாளாக போராட்டம்

கிராம உதவியாளர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; 2வது நாளாக போராட்டம்

கிராம உதவியாளர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு; 2வது நாளாக போராட்டம்


ADDED : டிச 24, 2025 08:44 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா ஈஞ்சம்பள்ளி வி.ஏ.ஓ.,வாக பணி செய்பவர் ஜெயந்தி. கிராம உதவியாளராக பணிபுரிபவர் கனிமொழி. இவரை அலுவலகத்துக்குள் அமர்ந்து பணி செய்யக்கூடாது என ஜெயந்தி கூறியுள்ளார்.

இதுபற்றி தாசில்தார் சிவசங்கரிடம், கனிமொழி புகார் செய்தும் வி.ஏ.ஒ., மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம் கனிமொழி, புஞ்சை காளமங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதை கனிமொழி ஏற்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் கனிமொழிக்கு ஆதரவாக, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், வி.ஏ.ஓ.,வை கண்டித்தும், இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரியும், தாசில்தார் மீது நடவடிக்கை கோரியும் நேற்று முன்தினம் முதல் கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

வளாகத்திலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். ஈரோடு ஆர்.டி.ஒ., சிந்துஜா உட்பட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.






      Dinamalar
      Follow us