sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அத்திக்கடவு திட்டம்-2ல் தனிக்குழு ஆய்வு; உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின் அறிக்கை

/

அத்திக்கடவு திட்டம்-2ல் தனிக்குழு ஆய்வு; உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின் அறிக்கை

அத்திக்கடவு திட்டம்-2ல் தனிக்குழு ஆய்வு; உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின் அறிக்கை

அத்திக்கடவு திட்டம்-2ல் தனிக்குழு ஆய்வு; உயரதிகாரிகள் ஆய்வுக்கு பின் அறிக்கை


ADDED : டிச 24, 2025 08:36 AM

Google News

ADDED : டிச 24, 2025 08:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறண்ட பகுதி குளம், குட்டை, ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் தண்ணீர் கொண்டு சென்று, பாசன வசதி, நிலத்தடி நீராதார உயர்வுக்காக அத்திக்கடவு - அவிநாசி திட்டம், 2023 மார்ச் 25ல் பயன்பாட்டுக்கு வந்தது.

இதில், 24,468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற தண்ணீர் வழங்கினர். பவானி, காளிங்கராயன்பாளையம் காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரி நீர், 1.5 டி.எம்.சி., 70 நாட்களுக்கு மட்டும் பம்பிங் செய்து, 1,045 குளம், குட்டை, ஏரிகளில் கொண்டு சேர்க்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. குழாய் சிறியது, மண் அடைப்பு, குழாய் உடைப்பு என்ற காரணத்தால், 100க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்லாத நிலை தொடர்ந்தது.

இதற்கிடையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்-2 ஏற்படுத்தி, விடுபட்ட குளங்கள், தண்ணீர் பற்றாக்குறை உள்ள பாசன பகுதியை இணைக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஒரு பகுதி விவசாயிகள் எதிர்க்கின்றனர்.

இதுபற்றி, அத்திக்கடவு - அவிநாசி திட்ட அலுவலர்கள் கூறியதாவது: திட்டம்-2க்கான கோரிக்கை வலுப்பதால், ஈரோட்டில் தனி பொறியாளர் குழு அமைத்து, நீரேற்றத்தில் சாத்தியம், எந்தெந்த பகுதி குளங்களை இணைக்கலாம், எங்கு நீரேற்றம் நடக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களது ஆலோசனைக்கு பின், உயரதிகாரிகள் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வர். அதன் அடிப்படையில், அரசு பரிசீலித்து அறிவிப்பு செய்யும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us