/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீரோடை கரையில் கம்பி வேலியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்ட முயற்சி
/
நீரோடை கரையில் கம்பி வேலியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்ட முயற்சி
நீரோடை கரையில் கம்பி வேலியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்ட முயற்சி
நீரோடை கரையில் கம்பி வேலியை அகற்றக்கோரி ஆர்ப்பாட்ட முயற்சி
ADDED : செப் 30, 2025 01:28 AM
பவானி அத்தாணி அருகே குப்பாண்டம்பாளையம் பஞ்., கரட்டூரில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை, கரட்டூர் பள்ளம் என்ற இடத்தில் வண்டிப்பாதை வழியாக கொண்டு சென்று, நீர்வளத்துறைக்கு சொந்தமான நீரோடை கரையில் அடக்கம் செய்து வந்தனர். கடந்த, 3ல் மூதாட்டி இறந்தார்.
உடக்கம் செய்வதற்காக உடலை எடுத்து சென்றனர். ஆனால், வண்டிப்பாதை பட்டா நிலம் என்பதால், இடத்தின் உரிமையாளர் கம்பிவேலி போட்டு அடைத்து விட்டார். இதனால் சடலத்துடன் மறியல் செய்தனர். பின்னர் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று சுடுகாடாக பயன்படுத்தப்படும் நீரோடை கரையில், ஆக்கிரமிப்பில் இருந்த தென்னை மற்றும் பாக்கு மரங்களை, பொதுப்பணித்துறையினர் ஏலம் விடுவதற்காக, மரங்களை சுற்றி கம்பி வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் கம்பி வேலியை அகற்றக்கோரி, 50க்கும் மேற்பட்டோர் கரட்டூர் பள்ளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்துக்குள் நீரோடை கரையில் அமைத்த கம்பி வேலியை அகற்றி கொள்வதாக அதிகாரிகள் கூறவே கலைந்து சென்றனர்.