/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சந்துக்கடை மது விற்பனை ஜோர் செம்படாபாளையத்தில் மறியல்
/
சந்துக்கடை மது விற்பனை ஜோர் செம்படாபாளையத்தில் மறியல்
சந்துக்கடை மது விற்பனை ஜோர் செம்படாபாளையத்தில் மறியல்
சந்துக்கடை மது விற்பனை ஜோர் செம்படாபாளையத்தில் மறியல்
ADDED : டிச 22, 2025 06:06 AM

பவானி: அம்மாபேட்டை அருகே பூனாச்சி, செம்படாபாளையத்தில், அரசு டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே, காலை, 6:00 மணி முதல் 12:00 மணி வரை, சந்துக்கடையில் சட்ட விரோத மது விற்-பனை நடக்கிறது. இதுகுறித்து அப்பகுதிவாசிகள் அம்மா-பேட்டை போலீசாரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் சித்தார்-பூனாச்சி ரோட்டில் செம்படாபாளையம் எம்.ஜி.ஆர்., சிலை அருகே நேற்று காலை, 9:30 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அம்மாபேட்டை போலீசார் பேச்சு-வார்த்தை நடத்தினர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

