ADDED : ஜூலை 08, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சியை சேர்ந்த அண்ணா ஓட்டுனர் சங்க
உறுப்பினர் கந்தசாமி சமீபத்தில் இறந்து விட்டார்.
அவரது
குடும்பத்தினருக்கு காங்கேயம் தொகுதி அண்ணா தொழிற்சங்கம் சார்பாக
இழப்பீடு தொகை, 25,000 ரூபாயை, காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ்
வழங்கினார். சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன்,
மேற்கு தங்கவேல், அண்ணா ஓட்டுநர் சங்க கவுரவ தலைவர்
சிவசுப்பிரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
