/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
/
நாளை பொது வினியோக திட்ட குறைதீர் முகாம்
ADDED : ஜன 23, 2026 04:40 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 10 தாலுகாவிலும் தலா ஒரு ரேஷன் கடையில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை நடக்க உள்ளது. புதிய ரேஷன் கார்டு கோருதல், நகல் அட்டை பெறுதல், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகளை மனு-வாக வழங்கி தீர்வு பெறலாம்.
இதன்படி தாலுகா வாரியாக, ஈரோடு - கங்காபுரம் ரேஷன் கடை, பெருந்துறை - பெரியவிளாமலை, மொடக்குறிச்சி - அரச்சலுார், கொடுமுடி கந்தசாமிபாளையம்-1 கொல்லன்கோவில், கோபி - கே.மேட்டுப்பாளையம் கூகலுார் 'அ' கிராமம், நம்பியூர் - ஒலலக்-கோவில், பவானி-ஊராட்சிகோட்டை, அந்தியூர் - பிரம்மதேசம், சத்தியமங்கலம் - பெரிய அரியப்பம்பாளையம், தாளவாடி - பையனபுரம்-1 கிராம ரேஷன் கடையில் முகாம் நடக்க உள்ளது.

