/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி அருகேயுள்ள காலியிடத்தை பட்டா போட பொதுமக்கள் எதிர்ப்பு
/
பள்ளி அருகேயுள்ள காலியிடத்தை பட்டா போட பொதுமக்கள் எதிர்ப்பு
பள்ளி அருகேயுள்ள காலியிடத்தை பட்டா போட பொதுமக்கள் எதிர்ப்பு
பள்ளி அருகேயுள்ள காலியிடத்தை பட்டா போட பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : அக் 26, 2024 08:11 AM
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட காளிபாளையம் கிழக்கு தெருவில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. பள்ளி அருகில் உள்ள பொதுக் கழிப்பறையும், அதை ஒட்டி காலி இடமும் உள்ளது.
இந்த காலி இடத்தை டவுன் பஞ்., சார்பில் ஜே.சி.பி., இயந்-திரம் மூலம் நேற்று சுத்தம் செய்தனர். இதுகு-றித்து மக்கள் விசாரிக்கையில், அந்த இடத்தில் மக்களுக்கு பட்டா வழங்குவதாகவும், அதற்காக நிலத்தை சுத்தம் செய்யும் பணி நடப்பதும் தெரிந்-தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி., இயந்திரத்தை சிறைபிடித்தனர். டவுன் பஞ்., செயல் அலுவலர் நாகராஜ் மற்றும் அதிகா-ரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 'பள்ளியை தரம் உயர்த்தும்போது, காலி இடத்தை பள்ளிக்கு மைதானமாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அந்த இடத்தை பட்டாவாக வழங்க கூடாது' என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியதால், தாராபுரம்-கரூர் சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்-பட்டது. தாராபுரம் டி.எஸ்.பி., சுரேஷ்குமார் பேச்-சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தார்.