/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.61.76 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல்
/
ரூ.61.76 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல்
ரூ.61.76 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல்
ரூ.61.76 லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லம் கொள்முதல்
ADDED : அக் 24, 2024 03:13 AM
கோபி: கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 61.76 லட்சம் ரூபாய்க்கு நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம் நேற்று கொள்முதல் செய்தது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை முதல் தரம், 60 கிலோ மூட்டை, 2,880 முதல், 2,900 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம், 2,760 முதல், 2,800 ரூபாய் வரை ஏலம் போனது. வரத்தான, 2,208 நாட்டு சர்க்கரை மூட்டை, 61.54 லட்சம் ரூபாய்க்கு விற்ப-னையானது.
உருண்டை வெல்லம், 13 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,650 ரூபாய் என, மொத்தம், 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை, உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 61.76 லட்சம் ரூபாய்க்கு கொள்-முதல் செய்ததாக, விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

