/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மழையால் வாரசந்தையில் பருப்பு வியாபாரம் மந்தம்
/
மழையால் வாரசந்தையில் பருப்பு வியாபாரம் மந்தம்
ADDED : டிச 01, 2024 01:21 AM
மழையால் வாரசந்தையில்
பருப்பு வியாபாரம் மந்தம்
கோபி, டிச. 1-
கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ) 170 முதல், 180 ரூபாய் வரையும், குண்டு உளுந்து, 135, பச்சை பயிர், 130, பாசிப்பருப்பு, 135, கடலைப்பருப்பு, 110, கடுகு, 100, சீரகம், 440, மல்லி, 140, வெந்தயம், 100, பொட்டுக்கடலை, 120, வரமிளகாய், 180 முதல், 200 ரூபாய் வரை, புளி, 120, பூண்டு, 340 முதல், 400 ரூபாய் வரையும், கொள்ளு, 90, அவரைப்பருப்பு, 180, பச்சை பட்டாணி, 220, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
வழக்கமாக சில்லரை வியாபாரம் ஓரளவுக்கு இருக்கும். ஆனால் நேற்று காலை முதல், வானம் மேக மூட்டமாகவும், அடிக்கடி சாரல் மழை பெய்ததால், வியாபாரம் மந்தமாக இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.