/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்க பரிந்துரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்க பரிந்துரை
ADDED : ஜூன் 21, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, பஸ் பாஸ் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பஸ் பாஸ் வழங்க பரிந்துரைத்தனர். முகாம் இன்றும் நடக்கிறது. நேற்றைய முகாமில், 10 பேருக்கு மடக்கு குச்சி, 10 மாற்றுத்திறனாளிகளுக்கு கண் கண்ணாடி, எட்டு பேருக்கு வாட்ச் வழங்கப்பட்டது.