/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
'மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 04, 2024 08:43 AM
ஈரோடு : ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா நுாலகம் அருகே, சர்வதேச நெகிழிப்பைகள் இல்லாத தினத்தை முன்னிட்டு, மீண்டும் மஞ்சப்பை டோரா விழிப்பு-ணர்வு பொம்மையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ், பொம்-மையை திறந்து, மஞ்சள் பையை பொதுமக்க-ளுக்கு வழங்கினார். தமிழக அரசு, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது. அதன் பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மாற்றாக மஞ்சப்பை திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, மஞ்சப்பை போன்ற துணிப்-பைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர். இதன்படி நேற்று பொதுமக்கள், சாலை ஓர சில்-லறை வியாபாரிகள், கடை உரிமையாளர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மோகன், மாநகராட்சி முதன்மை பொறியாளர் விஜய-குமார், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வ-கணபதி, பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறி-யாளர் குணசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.