sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யானை தாக்கி விவசாயி பலி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

/

யானை தாக்கி விவசாயி பலி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

யானை தாக்கி விவசாயி பலி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

யானை தாக்கி விவசாயி பலி உறவினர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 13, 2024 01:57 AM

Google News

ADDED : மார் 13, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாளவாடி:தாளவாடிமலையில், ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை மலை கிராமத்தை சேர்ந்தவர் மாக்கையா, 65; இவருக்கு சொந்தமான நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இரவில் யானைகள் வாழையை சேதம் செய்வதால், இரவில் காவல் பணிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சென்றார்.

அதிகாலையில் ஒரு யானை தோட்டத்தில் புகுந்தது. டார்ச் லைட் அடித்து விரட்ட முயன்றவரை, யானை மிதித்து கொன்றது. அக்கம்பக்கத்தினர் தகவலின்படி வனத்துறையினர் மற்றும் தாளவாடி போலீசார், சத்தி டி.எஸ்.பி., சரவணன் சென்றனர். பலியான விவசாயிக்கு இழப்பீடு கேட்டு, உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆசனுார் வன அதிகாரி சுதாகர் சென்றார்.

மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாக்கையா மனைவி மணியம்மாளிடம், ௫ லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினார். இதன் பிறகே மதியம், 3:௦௦ மணியளவில் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். விவசாயி உடலை எடுக்க விடாமல், 8 மணி நேரம் நடந்த போராட்டத்தால், அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.






      Dinamalar
      Follow us