ADDED : அக் 14, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை ஈரோடு மாநகரில் வழக்கமான உற்-சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆயுதபூஜைக்காக கொண்டு வரப்பட்டு விற்பனையாகாத வாழைக்கன்று உள்ளிட்ட கழிவு பொருட்களை, வழக்கம்போல் வியாபாரிகள் அதே இடத்தில் போட்டு சென்றனர்.
இந்நிலையில், ஆயுதபூஜை கழிவு பொருட்கள் சுத்தம் செய்யும் பணியில். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று ஈடுபட்-டனர். இதில், 300 டன் அளவுக்கு குப்பை கழிவு, வாழை மரக்-கன்று அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வழக்கமாக சேகரமாகும், ௧௭௦ டன் குப்பை அடங்கும்.