sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்

/

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றம்


ADDED : மே 02, 2025 01:40 AM

Google News

ADDED : மே 02, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக சமீபத்தில் புகார் எழுந்தது. மாநகராட்சியில் அனுமதி பெற்று அனுமதிக்கப்பட்ட சைசில், விளம்பர பதாகைகளை வைக்க வேண்டும் என்று மாநகராட்சி வலியுறுத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன், மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் வணிக, தொழில் நிறுவனங்களுக்கு அனுமதியற்ற பதாகைகளை அகற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. விளம்பர பதாகைகளை அகற்றாவிடில் மாநகராட்சி நிர்வாகம் அகற்றும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிலர் விளம்பர பதாகைகளை அகற்றி கொள்ளவில்லை.

இந்நிலையில், ஈரோடு காந்திஜி சாலையில் ப.செ.பார்க் முதல் காளைமாடு சிலை வரையில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த, விளம்பர பதாகைகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர். 50க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us