ADDED : மார் 16, 2024 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:மாநகராட்சி
சார்பில் ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள நாச்சியப்பா வீதி,
அகில்மேடு வீதி, வாசுகி வீதியில், இரண்டாவது நாளாக நேற்றும்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
இதேபோல் ஈஸ்வரன் கோவில் வீதியில்,
சாலையோர ஆக்கிரமிப்பில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. இதில்
நுாற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். டவுன்
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

