/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
அந்தியூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : ஜூன் 19, 2025 01:42 AM
அந்தியூர், அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து, பர்கூர் ரோடு வழியாக சீதாலட்சுமி தியேட்டர் வரையிலும், தவிட்டுப்பாளையம் யூனியன் அலுவலக சாலை, பவானி ரோட்டில் உள்ள அண்ணாமடுவு வரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, முதல்வர் தனிப்பிரிவுக்கு, பொதுமக்கள் புகார் மனுஅனுப்பி இருந்தனர்.
இதன்படி, சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள், வீடுகளின் உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. முதல் கட்டமாக கடந்த மாதம், 30ம் தேதி, அண்ணாமடுவில் இருந்து, பஸ் ஸ்டாண்ட் பர்கூர் ரோடு வழியாக இருந்த ஆக்கிரமிப்புகள் நெடுஞ்சாலைத்துறையினரால் அகற்றப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்டமாக, பவானி கோட்ட பொறியாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில், அந்தியூர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பாபு சரவணன் மேற்பார்வையில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா அருகில் இருந்து தவிட்டுப்பாளையம் யூனியன் அலுவலகம் வரை, இரு புறங்களிலும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.