ADDED : செப் 21, 2024 07:23 AM
ஈரோடு: ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காந்திஜி-ரோடு, ஆர்.கே.வி சாலை, மீனாட்சிசுந்தரனார் சாலை, சத்திசாலை உள்ளிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டி-ருந்தார்.
இதை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக, கமிஷனர் மனீஷ் தலைமையில் ஆலோ-சனை கூட்டம் நடந்தது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, ப.செ.பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக, சத்திசாலை எல்லை மாரியம்மன் கோவில் வரை,
ஜவுளிக்கடை உள்பட பல்வேறு வணிக நிறுவ-னங்களின் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அகற்றினர்.இதுகுறித்து ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டிருந்ததால், சாலையோர கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்
கடைகள் திறக்கப்பட்டன.தாமதத்தால் தவிப்புவழக்கமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காலை, 6:௦௦ மணிக்கு தொடங்கி, 9:௦௦ மணிக்குள் முடிக்கப்படும். ஆனால் நேற்று காலை, 10:௦௦
மணிக்குதான் பணி தொடங்கியது. இதனால் ப.செ.பார்க் முதல் சத்தி சாலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள்
தவித்தனர்.அதேசமயம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர்
ஈடுபட்டனர்.