ADDED : ஆக 03, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
டீச்சர்ஸ் காலனி அவ்வையார் வீதியில் வசிப்பவர் அசோக்குமார். ஈரோடு
தீயணைப்பு துறைக்கு நேற்று காலை, 7:00 மணியளவில் தகவல் தெரிவித்தார்.
அதன்படி தீயணைப்பு துறையினர் சென்றனர். ஒரு பூனையின் கழுத்தில்
பிளாஸ்டிக் கேன் சிக்கி கொண்டிருந்ததுது. இதனால் பூனை எங்கும் செல்ல
முடியாமல் ஒரே இடத்தில் நின்றபடி கத்தி கொண்டிருந்தது. தீயணைப்பு
துறையினர், 40 நிமிடங்கள் போராடி பிளாஸ்டிக் கேனை அகற்றிய பிறகு பூனை
ஓடி சென்றது.
